Friday, August 16, 2013

கேடிகளும் கேப்மாரிகளும் கல்விப்பணியாற்றினால்?

தில்லியில்  உள்ள நண்பர் ஒருவர் தன்னுடைய எம்.பி.ஏ. பட்டப்படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழக அஞ்சல் வழி பாட திட்டத்தில் சேர்ந்தார். தேர்வு மையம் சென்னை என்று தேர்வு செய்தார். சென்னைப் பல்கலைக்கழக அறிவாளிகள் தாம்பரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் உள்ளே தனிக்காட்டில் இயங்கிய தனியார் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்து அங்கு தேர்வினை நடத்தினார்கள். நண்பரும் ஒரு நாள் முன்னதாக சென்னை வந்தார். தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வு வளாகத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நண்பர் ஓட்டல் ஒன்றில் தங்கிவிட்டு வாடகைக்கு கார் ஒன்றை அமர்த்தி கல்லூரிக்கு சென்றார். அலுவலகத்தில் பேன்ட் ஷர்ட் அணிந்து செல்லும் வழக்கம் கொண்ட அவர், விடுப்பில் தானே வந்தோம் என்று ஜீன்ஸ் பேன்ட் அணிந்து சென்றிருக்கிறார்.
கல்லூரியில் உள்ள குண்டர்கள் (அப்படிப்பட்டவர்களைத்தானே இப்போது என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்கு வைக்கிறார்கள்) முதலில் நண்பரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் நண்பரைப் பார்த்து நீங்கள் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நண்பரும், இது பற்றி எனக்கு முன்னரே சொல்லியிருந்தால் நான் அணிந்து வந்திருக்க மாட்டேனே என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள், இது கல்லூரி விதிமுறை, இது பற்றி தேர்வு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டு இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். (அந்த நுழைவுச்சீட்டை கல்லூரிக்கு வந்தபின்னர் தான் பெறமுடியும் என்பதை அந்த குண்டர்கள் ஏன் அறிந்திருக்கவில்லை என்று தெரியவில்லை).
நண்பர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வந்த பலர் அங்கு தேர்வுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்துள்ளனர். உடனே அந்த குண்டர்கள், கல்லூரியின் விடுதியில் உள்ள மாணவர்கள் அறைகளுக்கு சென்று மாணவர்களின் பேன்ட்டுகளை எடுத்து நண்பரை அணிய செய்திருக்கிறார்கள். அடுத்தவரின் உடையை அணிந்து ஒருவித அருவெறுப்புடன் நண்பர் தேர்வினை எழுதி வந்துள்ளார்.
மாணவர்கள் உடையின் அளவு பொருந்தாத மற்ற தேர்வு நாடுநர் நிலைமையை சொல்லி மாளாது.
நடுக்காட்டில் உள்ள அந்த கல்லூரியில் உணவுக்கும் வசதியில்லையாம். இப்படி கல்லூரியாக தேர்வு செய்து அங்கு தேர்வினை எழுதவைத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களின் புத்திசாலித்தனத்தையும், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி குண்டர்களையும், மாணவர்களின் உடைகளை விடுதியில் இருந்து எடுத்து அணிந்து கொள்ள அனுமதித்த அவர்கள் தாராளத்தையும் எண்ணி மத்திய அரசு பணியில் இயக்குநர் அந்தஸ்த்தில் உள்ள அந்த நண்பர் நொந்து போய் புலம்பித் தள்ளிக்கொண்டு இருந்தார்.

3 comments:

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பபூ அறிமுகம்மானது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/6_24.html?showComment=1377308895348#c7692767288255196790 வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/6_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

Post a Comment